இந்தியா கன்னியாகுமரியில் காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் பட்டகசாலியன்விளை பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் பேசி பழகி வந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த வாலிபரிடம், பெண் வலியுறுத்தினார். ஆனால் அவரை திருமணம் செய்ய வாலிபர் மறுத்ததால் குறித்த இளம்பெண் மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நேசமணிநகர் பொலிஸில் முருகேசன் முறைப்பாடு அளித்துள்ளார். அதன்பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.