பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை; அவிழும் மர்ம முடிச்சுக்கள்

0
26

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் இறந்த வாகனத்தின் பின்னால் பயணித்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தில் கஜ்ஜா என்ற அருண விதானகமகே இருந்ததாக அவரது மனைவி தெரிவித்தது குறித்து கஜ்ஜாவின் மூத்த மகன் நேற்று (01) ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டார்.

விசாரணையுடன் தொடர்புடைய சிசிடிவி காட்சிகளை கஜ்ஜாவின் சகோதரர்கள் மற்றும் சகோதரியிடம் காட்டி அந்த காணொளியில் இருப்பவர் தமது தந்தைதானா என அவர்களிடம் ஏன் பொலிஸார் கேட்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மித்தெனியவில் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட கஜ்ஜா என்ற அருண விதானகமகே, 2012 ஆம் ஆண்டு ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் இறந்த வாகனத்தின் பின்னால் பயணித்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தில் இருந்தமையை அவரது மனைவி உறுதிப்படுத்தியிருந்ததாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் தெரிவித்தார்.

இந்நிலையில் கஜ்ஜாவின் மூத்த மகன் இந்துவர விதானகமகேவும் இந்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தார். எனது தந்தைக்கும் இந்த கொலைச் சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. வசீம் தாஜுதீனின் மரணம் நிகழ்ந்த 2012 ஆம் ஆண்டில் தந்தை பேருந்து நடத்துனராகவே செயற்பட்டிருந்தார்.

எனவே அந்த கொலையுடன் அவர் தொடர்பு பட்டிருக்க முடியாது. இதேவேளை தமது தந்தை கொலை செய்யப்பட்டதன் பின்னர் தமது தயாரின் வங்கிக் கணக்கிற்கு ஒரு தொகை பணம் வைப்பிலிடப்பட்டிருந்தது.

அது தொடர்பில் தாம் தமது தாயாரிடம் வினவிய போதே பெக்கோ சமன் என்பவரால் அந்த பணம் வழங்கப்பட்டதை தாம் அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே இந்த சம்பவம் தொடர்பில் உரிய வகையில் விசாரணை வேண்டும் எனவும் கஜ்ஜாவின் மூத்த மகன் குறிப்பிட்டுள்ளார்.