நான் முதலமைச்சராக தெரிவானால் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரமுன் நான் கச்சத்தீவில் வந்து நிற்பேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு எமது சொத்து அதனை நான் முதலமைச்சராக தெரிவானது நிச்சயமாக மீட்டெடுப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தமை தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியிருந்த நிலையில் சீமான் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.