கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இந்தியா மீளப் பெற ணே்டும் – TVK

0
23

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கச்சத்தீவை குத்தகை அடிப்படையில் இந்தியா அரசாங்கம் பெறவேண்டும் என்று தமிழக வெற்​றிக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழக வெற்​றிக் கழகத்​தின் செயற்​குழு கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.

கூட்​டத்​துக்கு கட்​சி​யின் தலை​வர் விஜய் தலைமை தாங்​கி​னார். பொதுச் செய​லா​ளர் ஆனந்த உட்பட கட்சி மாநில நிர்​வாகி​கள், மாவட்ட செய​லா​ளர்​கள், மாநில செயற்​குழு உறுப்​பினர்​கள், சிறப்​புக் குழு உறுப்​பினர்​கள் பங்​கேற்​றனர்.

இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கொள்கை எதிரி​களு​டனோ, பிளவு​வாத சக்​தி​களு​டனோ என்​றும் நேரடி​யாகவோ மறை​முக​மாகவோ கூட்​டணி இல்லை, முதல்வர் வேட்பாளர் விஜய் என்பன உள்​ளிட்ட 20 தீர்​மானங்​கள் நிறைவேற்றப்​பட்​டன.