புலிகளின் ஆயுதங்கள்; அர்ச்சுனா எம்.பியின் கருத்தை மறுக்கும் பாதுகாப்பு அமைச்சகம்

0
35

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் சமீபத்தில் சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறிய கூற்றுகளை பாதுகாப்பு அமைச்சகம் கடுமையாக மறுத்துள்ளது.

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா இந்த அறிக்கையை முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் பொய்யானது என்று நிராகரித்தார். அத்துடன் அத்தகைய குற்றச்சாட்டுகளை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.