ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் சற்றுமுன்னர் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன் 27 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிலர் கண்டி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


