திண்மக் கழிவுகள் அகற்றும் திட்டம்: 10.20 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிய கொரியா

0
137

இலங்கையின் ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் திண்மக் கழிவு முகாமைத்துவ நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக கொரிய அரசாங்கம் 10.20 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

2024 – 2028 காலகட்டத்தில் உள்ளூராட்சி மட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை பொறிமுறையை நிறுவும் மறைமுக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும்.

கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகாமையின் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் கொரிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் இத் திட்டத்துக்கு பிரதமர் ஹரினி அமரசூரிய இவ் வாரம் அமைச்சரவை அனுமதிப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.