குடும்ப தகராறில் கணவனை கொன்ற மனைவி; இலங்கையில் அதிர்ச்சி

0
47

வீடொன்றில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் கணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (07) இரவு நொச்சியாகம, வல்பலகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் நொச்சியாகம, வல்பலகம பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய கணவனே உயிரிழந்துள்ளார். சம்பவத்தன்று உயிரிழந்த கணவன் மது போதையில் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது மனைவி கணவனின் வாயை துணியால் கட்ட முற்பட்ட போது கணவன் மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து மயக்கமடைந்த கணவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது கணவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கணவன் மதுபோதையில் மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் அயல் வீட்டார்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.