அன்று கோட்டா, இன்று ஹசீனா… உள்ளாடைகளை கைப்பற்றிய ஆர்ப்பாட்டக்காரர்கள்!

0
79

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மக்கள் போராட்டத்தால் நாட்டைவிட்டு தப்பி ஓடியது போல வங்கதேசத்தில் வெடித்த மாணவர் போராட்டத்தால் ஒரே நாளில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட சம்பவம் உலகநாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாணவர்கள் போராட்டத்தால் நாட்டைவிட்டு வெளியேறிய வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மாளிகையை சூறையாடிய வன்முறைக் கும்பல் அவரது வீட்டில் இருந்த உள்ளாடைகளையும் கூட அள்ளிச் சென்ற 2 புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்  போராட்டகாரக்ளில் சிலர் ஷேக் ஹசீனா வீட்டில் கொள்ளையடித்த சேலைகளை அங்கேயே அணிந்து போட்டோக்களுக்கு போஸ் கொடுத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

மாணவர்கள் பெயரிலான கும்பல்தான் இத்தகைய அட்டூழியங்களை செய்ததாக வங்கதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஷேக் ஹசீனா 16 ஆண்டுகள் வங்கதேசத்தின் நாட்டின் பிரதமராக பதவி வகித்தார்.

வங்கதேச விடுதலைக்கு போராடியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதற்கு மாணவர்களின் பெயரில் பெரும் புரட்சி ஏற்பட்டது. இந்த புரட்சிதான் ஷேக் ஹசீனாவின் ஆட்சியையே கவிழ்த்துவிட்டது.

கடந்த சில மாதங்களாக மாணவர்கள் நடத்திய போராட்டம் மிகப் பெரும் வன்முறையாக வெடித்தது. பாதுகாப்புத் தரப்பில் பலர் கொல்லப்பட்டதால் ஈவு இரக்கமே இல்லாமல் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன.

இதில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதன் உச்சகட்டமாக ஷேக் ஹசீனா நேற்றையதினம் (5) தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் ஷேக் ஹசீனாவின் மாளிகையை போராட்டக்காரர்கள் என்ற பெயரில் வன்முறை கும்பல் முற்றுகையிட்டதால் உயிர் தப்பி இந்தியாவுக்கு ஓடியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் டாக்காவில் ஷேக் ஹசீனாவின் மாளிகைக்குள் நுழைந்த வன்முறை கும்பல் ஷேக் ஹசீனா மாளிகையில் இருந்த உள்ளாடைகள் உட்பட பல பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றது.

அதேவேளை கடந்த காலங்களில் இலங்கையில் கோட்டாபய ராஜபக்க்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் நாட்டி ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மாபெரும் மக்கள் புரட்சி வெடித்த நிலையில் கோட்டாபய நாட்டை விட்டு ஓடியிருந்தார்.

இருந்து ஆத்திரம் தீராத தென்னிலங்கை மக்கள் ஜனாதிபதி மாளிக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை எடுத்துச்சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அப்போது உலகளவில் இலங்கை போராட்டம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது வங்கதேச போராட்டமும் உலகின்  கவனத்தை உற்றுநோக்க வைத்துள்ளது.