நாட்டை விட்டு வௌியேறிய ஹேக் ஹசீனா; மகன் வெளியிட்ட அறிவிப்பு!

0
125

பங்களாதேஷ் பிரதமர் பதவியில் இருந்து விலகி இன்று நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா மீண்டும் அரசியலுக்கு வரமாட்டார் என அவரது மகனும் முன்னாள் தலைமை ஆலோசகருமான ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

நாட்டை மாற்றியமைக்க அவர் முயற்சித்த போதிலும், அவரது அரசாங்கத்திற்கு எதிரான வலுவான பொது உணர்வால் ஏமாற்றமடைந்த அவர் விலக முடிவு செய்துள்ளார் என்று சர்வதேச ஊடக நிகழ்ச்சியில் சஜீப் வாஜேத் ஜாய் கூறினார். 

‘இடைக்கால அரசு விரைவாக அமைக்கப்படும்’ என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இச்சூழலில் புகழ்பெற்ற எழுத்தாளரும், பேராசிரியருமான சலிமுல்லா கான் தலைமையில் பங்களாதேசத்தில் இடைக்கால அரசு அமையும் என்று பங்களாதேச தேசிய கட்சி தெரிவித்துள்ளது.