பங்களாதேஷ் நாடாளுமன்றத்திற்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த செயல்… வைரலாகும் வீடியோ!

0
54

வங்காளதேசத்தில் ஆளும் அவாமி லீக் அரசுக்கு எதிரான போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வருகின்றது. கடந்த ஒரு மாதத்தில் போராட்டத்தில் 300 பேர் பலியான நிலையில், நேற்று நடந்த புதிய கலவரத்தில் 100 பேர் வரை உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 

இவ்வாறான நிலையில் நாடாளுமன்றத்திற்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் மேஜை மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். சிலர் கைபேசியில் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர். ஒரு சிலர் நாற்காலிகளில் அமர்ந்திருந்தவர்களை காணொளி எடுத்தனர். 

நாடாளுமன்றத்தின் உள்ளே கூடியிருந்தவர்களில் சிலர் எதனையோ எரித்ததில், அந்த பகுதி முழுவதும் புகை பரவி பல அடி உயரத்திற்கு சென்றது. சிலர் கைத்தட்டியும், வெற்றி முழக்கங்களை எழுப்பியும், மேஜை மீது நடந்து சென்றும், குதித்தபடியும் காணப்பட்டனர்.