மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கோரிய ஜனாதிபதி ரணில்

0
60

2015 ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மக்களிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார். ஊடக உரிமையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் சரியான நேரத்தில் நடத்தப்படும் என தெரிவித்த ஜனாதிபதிரணில், சர்வஜன வாக்கெடுப்புக்குப் பின்னரும் ஜனநாயகம் தொடர்ந்து இயங்கும் ஒரே நாடு இலங்கை மட்டுமே என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த நிலைமையை பேணுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதால் அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளும் போது குறித்த விடயத்தில் அனுபவம் வாய்ந்தவரான சட்டத்தரணி கே. என் சோக்சியிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

இந்தநிலையில் 2015 ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட போது சட்டத்தரணி சோக்சி உயிருடன் இல்லாத காரணத்தால் இந்த விடயத்தை சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்னவிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி தனது கவனக்குறைவால் தற்போதைய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அதற்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.