தேர்தலை பிற்போட்டால் இரத்தக் களரி ஏற்படும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0
31

ஜனாதிபதி தேர்தலைப் பிற்போட முயற்சித்தால் நாட்டில் வன்முறை வெடிக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதித் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் எனவும் அதனை எந்த வகையிலும் ஒத்திவைக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் முன் நிறுத்தப்படவுள்ளதாகவும், அதற்கான வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.