ஸாஹிரா கல்லூரி மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்: கிழக்கு ஆளுநர் வழங்கிய வாக்குறுதி

0
98

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவர்களின் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்டள்ளது.

அதன்படி 70 இற்கும் மேற்பட்ட மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

தாம் எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலைமை குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டவந்த மாணவர்கள் தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக காதுகளை மறைத்து பர்தா அணிந்து பரீட்சை எழுத முடியாது. இந்நிலையில், இம்மாணவர்கள் அவ்வாறு பரீட்சைக்கு தோற்றியதால் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.