சீரற்ற வானிலை: உதவிக்கு பொலிஸ் 24 மணி நேர செயற்பாட்டு மையம்

0
125

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் பொலிஸ் தலைமையகத்தில் 24 மணி நேர தொலைபேசி அழைப்புடனான விசேட செயற்பாட்டு பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் பொதுமக்கள் அறியத் தருவதற்கும் அது தொடர்பான தொடர்புபடுத்தல் பணிகளை முன்னெடுக்கவும் குறித்த பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையக பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஒருவரின் கண்காணிப்பின் கீழ் இன்று (02) மாலை 6.00 மணி முதல் 24 மணித்தியாலங்களும் குறித்த பிரிவு இயங்குகின்றது.

அதற்கமைய, பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஊடாக குறித்த விசேட பிரிவுடன் தொடர்புற முடியும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

011 2421820 (உடனடி தொலைபேசி இலக்கம்)
011 2439212
011 2013036
011 2013039

மின்னஞ்சல்: disaster.ops@police.lk