மகாவலி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு காணி உறுதி: உலகில் இதுவரை அமுல்படுத்தப்படாத வேலைத்திட்டம்

0
148

மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை புரட்சிகரமானதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பொலன்னறுவை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை (04) நடைபெற்ற “உறுமய” திட்டத்தின் கீழ் மகாவலி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார்.

உலகில் எந்தவொரு நாட்டிலும் இதுவரை இவ்வாறான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.