உள்ளாடையுடன் வவுனியா பல்கலைக்கழக மகளிர் விடுதிக்குள் நுளைந்த நபர்; அதிர்ச்சியில் தாய் மரணம்!

0
114

வவுனியா பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் நபரொருவர் உள்ளாடையுடன் நுளைந்த சம்பவம் மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (19-04-2024) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இரவு வேளையில் மர்ம நபரொருவர் உள்ளாடையுடன் உள்நுளைந்துள்ளார்.

இதனால் அங்கிருந்த மாணவி ஒருவர் அச்சமடைந்த நிலையில் கூக்குரலிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த நபர் தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து இவ் விடயம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தாயாருக்கு தொலைபேசியூடாக இவ் விடயத்தினை தெரிவித்துள்ளார். இதனால் ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் இச்சம்பவத்தில் மனமுடைந்து நோயினால் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தால் மாணவிகள் விடுதியிலிருந்து முற்றாக வெளியேறியுள்ளமையுடன் இவ் அநீதிக்கு எதிரான நீதியினை கோரியுள்ளமையுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஏன் உள்ளனர் என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளனர்.

இதேவேளை உள்ளாடையுடன் உள்நுளைந்த நபர் தொடர்பாக கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.