ஆரஞ்சு நிறமாக மாறியது கிரீஸ் தலைநகர்!

0
239

மத்தியதரை கடலில் காணப்பட்ட தூசுமேகங்கள் கிரேக்கத்தின் வரலாற்று புகழ்மிக்க பல நகரங்களை சூழ்ந்து கொண்டதால் தெற்கு கிரேக்கத்தின் மீதான வானம் திடீரென ஓரேஞ்சு நிறத்திற்கு மாறியது.

சகாரா பாலைவனத்திலிருந்து புழுதியை கடும் காற்று கொண்டுவந்ததே இதற்கு காரணம். அதேவேளை கடும் காற்று காரணமாக கிரேக்கத்தின் தென்பகுதிகளில் காட்டுதீ மூண்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 25 காட்டுதீ மூண்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளன