மலேசியாவில் மரதன் போட்டியில் முதலிடம் பிடித்த இலங்கையர்!

0
150

மலேசியா Batu pahat நகரில் மலேசியா வாழ் இலங்கையர்களின் புது வருட விளையாட்டு போட்டி கோலாகலமாக நடைப்பெற்றுள்ளது. குறித்த மரதன் போட்டியில் புத்தளத்தைச் சேர்ந்த சிப்ரான் நப்லி முதலிடம் பெற்றார்.

சிப்ரான் நப்லி சாஹிரா கல்லூரி பழைய மாணவரும், பாடசாலைக் காலத்தில் 4 தடவை மரதன் போட்டியில் முதலிடம் மற்றும் நெடுந்தூர ஓட்ட சம்பியனாகவும் திகழ்ந்துள்ளார்.

மேலும் இவர் புத்தளம் Big bang சமூக அமைப்பின் அணியின் தலைவராகவும் மலேசியாவில் தொழில் புரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.