ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டு: தினேஸ் குணவர்தனவிடம் எரான் கேள்வி

0
152

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை அரசாங்கம் தொடர்ச்சியாகப் புறக்கணிக்க காரணம் என்ன என்பதை விளக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன வலியுறுத்தல் விடுத்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எப்போது நாடாளுமன்றுக்கும் மக்களுக்கும் கிடைக்கும் என்பதை தெரிவிக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 சுமத்திய குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னேற்றம் குறித்தும் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதுமட்டுமன்றி சனல் 4 சுமத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்தமைக்கான காரணத்தை விளக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் பின்னர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவால் ஏற்பட்ட முன்னேற்றம் அல்லது முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அதற்கான காரணங்கள் மற்றும் தெரிவுக்குழுவின் வரம்பு குறித்து விளக்குமாறும் அவர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.