நாயை எரித்து கொன்ற நபர்; கொடூர செயல்

0
127

கம்பஹா இம்புல்கொட பிரதேசத்தில் நாயை எரித்து கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் நேற்று யக்கல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜகத் குமார என்ற 65 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செல்லப்பிராணி

உலயகொட பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் இன்று கம்பஹா மேலதிக நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சந்தேகநபர் செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்த உயர் இன நாய்களுடன் உயிரிழந்த நாய் இணைந்து செயற்பட்டதால் அவர் நாயை தீ வைத்து கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.