யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலயத்தின் இரதோற்சவப் பெருவிழா இன்று காலை பக்தர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது. யாழ் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலயமும் ஒன்றாகும்.
இந்நிலையில் இன்று இடம்பெற்ற் ஆஞ்சநேயர் ஆலயத்தின் இரதோற்சவப் பெருவிழாவில் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திக்க்கடன்களை செலுத்தி இருந்ததுடன் ஆஞ்சநேயரின் அருளையும் பெற்றிருந்தனர்.



