இயக்கச்சியில் ஒரே தேங்காயில் இரு தென்னம் கன்றுகள் முளைத்த அதிசயம்!

0
425

ஒரே தேங்காயில் இரு தென்னம் கன்றுகள் முளைத்த அதிசய நிகழ்வொன்று கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha Organic Farm நிகழ்ந்துள்ளது.

பொதுவாகவே தென்னம் கற்றுகளுக்கு பதியன்முறையினை எங்கள் மூதாதையர்கள் கூறிவைத்துள்ளனர். மண்ணுக்குள் புதைத்துவைத்து தென்னம் கன்றுகளை உருவாக்குவார்கள்.

அந்தவகையில் ReeCha இல் ஒரு தேங்காயில் இரு தென்னம்பிள்ளைகள் முளைத்துள்ளமை பலருக்கும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களுள் ஒன்றாக ReeCha Organic Farm அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.