பொலிஸாரின் சுற்றிவளைப்பு: யாழில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஒருவர் கைது

0
248

யாழில் சட்டவிரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நாவற்குழி பகுதியில் நேற்று(03.01.2024) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் நடவடிக்கை

இதன்போது கைது செய்யப்பட்ட 54 வயதுடைய சந்தேக நபரிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் எடையுடைய கடலாமை இறைச்சி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.