இலங்கையில் அடுத்தாண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்; அமெரிக்கா நம்பிக்கை

0
190

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜனநாயக ஆட்சிக்கு சரியான நேரத்தில் தேர்தல்கள் நடப்பது முக்கியம். அதனால் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், பாராளுமன்றத் தேர்தல்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறுமென நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல்களுக்காக அனைத்து மக்களுக்கு குரல் கொடுக்கின்றனர். வாக்குப்பெட்டியில் மக்களால் தங்கள் கருத்தைக் கூற முடியும். மற்றும் அவர்களின் தலைமையைத் தேர்ந்தெடுக்க முடியும். இலங்கையில் அடுத்த வருடமும் அதற்குப் பிறகும் தேர்தல்கள் முறையாக திட்டமிடப்பட்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலைக் காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இலங்கையின் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் கலாசாரம் தொடரும் என்பதை அமெரிக்கா உறுதியாக நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.