யாழ்ப்பாணம் – காரைநகரில் சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டப்பட்ட ஒருவரைப் பொலிஸார் கைது செய்ய முயன்றபோது அவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
![srilanka hospital srilanka hospital](https://cdn.ibcstack.com/article/82a10d01-d4e2-47c6-b73a-1832972b051d/23-64f56638e287f.webp)
ஆபத்தான கட்டத்தைத் தாண்டவில்லை
மனைவியின் சகோதரியின் மகளைத் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அந்த முறைப்பாட்டுக்கு அமைய இன்று (செப்ரெம்பர் 3) பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்யச் சென்றபோதே அவர் உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.
தற்போது சிகிச்சை பெற்றுவரும் அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டவில்லை என கூறப்படுகிவதுடன் சந்தேகநபருக்கு மருத்துவமனையில் பொலிஸார் பாதுகாப்பு வழங்கி வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
![Srilanka Hospital Police Srilanka Hospital Police](https://cdn.ibcstack.com/article/b6cc6a15-92a9-44dd-bd3a-9cd623572e87/23-64f566394a573.webp)