இலங்கை தமிழ் பாடசாலையில் 42 மாணவர்கள் திடீர் சுகவீனம்; பரபரப்பு

0
500

தமிழ் பாடசாலையொன்றில்  திடீர் ​சுகயீனமடைந்த 42 மாணவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்தனை தமிழ் வித்தியாலய மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் பாடசாலையொன்றில் இன்று ஏற்பட்ட பரபரப்பு! மாணவர்கள் மருத்துவமனையில் | 42 Students Who Suddenly Recovered

மாணவ மாணவிகள்

தரம் 6 தொடக்கம் 11ஆம் தரம் வரை கல்வி கற்கும் 13 மாணவர்களும் 29 மாணவிகளுமே இவ்வாறு வைத்தியசாலையில் ​அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் பாடசாலையொன்றில் இன்று ஏற்பட்ட பரபரப்பு! மாணவர்கள் மருத்துவமனையில் | 42 Students Who Suddenly Recovered

இவர்களுள் சில மாணவர்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

எனினும் , சில மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் இவர்களில் நிலை சாதாரணமாக உள்ளதென்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

எனினும் மாணவர்களின் திடீர் சுகயினத்திற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.