40 கோடி பண மோசடி; இன்ஸ்டா பிரபலம் கைது

0
191

பண மோசடி வழக்கில் இந்திய அமலாக்கத்துறை, சந்தீபா விர்க் என்ற இன்ஸ்டா பிரபலத்தை கைது செய்துள்ளனர். 12 இலட்சம் பின்தொடர்பவர்களை (Followers) வைத்திருக்கும் சந்தீபா விர்க் 40 கோடி ரூபாய் அளவில் பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

சந்தீபா விர்க் மோசடி வழியில் அசையா சொத்துகளை வாங்கியதாகவும், அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பண மோசடி வழக்கு தொடர்பாக சோதனை நடத்தியது. அப்போது இவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தீபா விர்க் கைது செய்யப்பட்டுள்ளார்.