உலகம் முழுவதும் இருந்து 2023ஆம் ஆண்டுக்கான ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிகுந்த 100 பெண்களின் பட்டியலை சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் மனித உரிமை வழக்கறிஞர் அமல் குளூனி, முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி மிஷெல் ஒபாமா, புரவலர் மெலிண்டா ஃப்ரெஞ்ச் கேட்ஸ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூன்று பெண்களும் உலகில் குழந்தை திருமணத்தை எதிர்த்து செயல்பட ஒன்றாக இணைந்துள்ளனர்.
ஒரு தலைமுறைக்குள் குழந்தை திருமணத்தை ஒழிக்க முடியும் என்றும் அதற்கான உத்திகளும் குறித்தும் சர்வதேச ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் அவர்கள் கூறுகின்றனர்.