அதிமேதகு ஜனாதிபதி, மாண்புமிகு வேண்டாம் – ஜனாதிபதி அநுரகுமார

0
26

தன்னை அதிமேதகு ஜனாதிபதி, மாண்புமிகு ஜனாதிபதி என்றெல்லாம் விளிப்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விரும்பவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பதவி நிலை கருதி ஜனாதிபதியென அழைத்தால் போதும் என அதிகாரிகளிடம் கூட ஜனாதிபதி கூறியுள்ளார் எனத் தெரியவருகின்றது.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி செயற்பட்டாளர்கள், ஜனாதிபதி தோழர் என்றே அநுரகுமார திஸாநாயக்கவை அழைக்கின்றனர் எனவும் அறியமுடிகின்றது.

அதேவேளை, ஜனாதிபதிக்குரிய சலுகைகளைப் பயன்படுத்துவதை முடிந்தளவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தவிர்த்து வருகின்றார் எனவும் கூறப்படுகின்றது.