13 நாட்களில் அரசாங்கம் 41 கோடிக்கு மேல் கடன்; ஜனாதிபதி அநுர அரசாங்கத்தின் மேல் எழுந்துள்ள குற்றச்சாட்டு

0
13

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் கடந்த 02 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையிலான 13 நாட்களில் 419 பில்லியன் ரூபா திறைசேறி பத்திரம் மற்றும் பிணைமுறி கடன்களை பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் வரம்பற்ற கடன்களை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள போதிலும் நாட்டு மக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி எவ்வாறான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் ரோஹினி கவிரத்ன கோரியுள்ளார்.

இதனிடையே நாடாளுமன்ற தேர்தலிற்கு முன்னதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை திசைதிருப்ப ஏனைய சிங்கள கட்சிகள் போன்றே இனவாதத்தை அனுர தரப்பு கையில் எடுத்துள்ளது.

வடக்கு மக்களுக்கு 13ஆவது திருத்தச்சட்டமும், அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை என்பதுடன் பொருளாதார பிரச்சினைகளுக்கே தீர்வு அவசியமாக உள்ளது. ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இந்த வசனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி புதிய அரசாங்கம் மணித்தியாலத்திற்கு 134.9 கோடி ரூபா என்ற அடிப்படையில் கடன் பெற்றுக்கொண்டுள்ளது என ரோஹினி கவிரட்ன தெரிவித்துள்ளார்.