நுவரெலியாவில் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் காட்சியளித்த வெள்ளை நுரை!

0
48

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நானுஓயா பிளாக்ஃபுல் பகுதியில் வெள்ளை நுரை வெளியேற ஆரம்பித்துள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். நுவரெலியாவில் நேற்று (11) பிற்பகல் 1.00 மணி முதல் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.

இதனால் நானுஓயா ஊடாக பாயும் ஆற்றிலும், கால்வாய்களிலும், மரக்கறி தோட்டங்களிலும் மற்றும் தேயிலைத் தோட்டங்களிலும் ஒரே நேரத்தில் வெள்ளை நுரை தோன்ற ஆரம்பித்துள்ளதாகப் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.