அதிசய காளான்: பூஜை செய்து வழிபட்ட பெண்கள்

0
50

ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டம், வம்புண்வரம் பகுதியில் அதிசய காளான் ஒள்று முளைத்துள்ளது. சுமார் 2 அடி உயரம் 3 அடி அகலத்தில் மூன்று அடுக்குகளைக் கொண்டு இது வளர்ந்துள்ளது.

இதனைப் பார்த்த அப் பகுதி மக்கள் ஆச்சரியப்பட்டதுடன் சில பெண்கள் அக் காளானுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்தும் வழிபட்டுள்ளனர்.