நண்பர்களால் மன உளைச்சல்; தாமரை கோபுரத்தில் மாணவி தற்கொலை!

0
45

கொழும்பு தாமரைக் கோபுரத்தில் 29 ஆவது மாடியில் இருந்து 03 ஆவது மாடிக்கு குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவி குறித்த தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

நேற்று (07) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் குறித்த பாடசாலை மாணவி கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 11 ஆம் ஆண்டு படித்து வந்தமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மாணவி பாடசாலை முடிந்து தாமரை கோபுரத்திற்கு சென்று 29 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவன் மற்றும் மாணவியின் தோழியே இந்த பாடசாலை மாணவி எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

தனது நண்பர்களின் தற்கொலையினால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும் அவரது தந்தை பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.