கட்டுப்பணத்தை செலுத்திய 122 சுயேச்சைக் குழுக்கள்: தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம்

0
53

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள 122 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

36 சுயேச்சைக் குழுக்கள் நேற்றைய தினம் (04) கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆரம்பமான நேற்று (4) ஜனசேத பெரமுன மற்றும் 3 சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கான சுயேச்சைக் குழுக்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.