நீராவியடி பிள்ளையார் ஆலய பொங்கல் உற்சவம் குழப்பும் நடவடிக்கையில் பொலிஸார்!

0
60

முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்று வந்துள்ளது.

இதேவேளை பொங்கல் உற்சவத்தை குழப்பும் முகமாக பாரிய மீன் கூலர் ரக வாகனம் வரவழைக்கப்பட்டு ஆலயத்திற்கு மின் வழங்கும் வயர் அறுக்கப்பட்டு பொங்கல் உற்சவத்தினை தடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் ஆரம்பமாகிய நிலையில் நேற்று பாரம்பரிய முறைப்படி கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு உற்சவம் ஆரம்பித்து இன்று பொங்கல் உற்சவம் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் மாலை நேரம் ஆலய வளாகத்திற்குள் மீன் வியாபாரம் மேற்கொள்ளும் கூளர் ரக வாகனம் ஒன்றினை பொலிஸார் உள்ளே அழைத்து குறித்த வாகனத்தினால் ஆலயத்திற்கு செல்லும் மின்சார வயர் அறுக்கப்பட்டதனால் பொலிஸார், பிக்கு மற்றும் ஆலய நிர்வாகத்தினருக்கிடைய முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.

இன்று பொங்கல் உற்சவம் நடைபெற்ற வேளை திட்டமிட்டு குழப்பும் நோக்கோடு ஆலய வளாக பகுதிக்குள் மீன் ஏற்றும் கூலர்ரக வாகனம் கொண்டு வரப்பட்டு ஆலயத்திற்கு மின் வழங்கும் வயர் அறுத்து விடப்பட்டுள்ளது.

இதனால் ஆலயத்தில் மின் தடை ஏற்பட்டிருந்தது. அத்தோடு அறுத்துவிடப்பட்ட மின் வயறினால் மின் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் ஆலய உற்சவத்தினை குழப்பும் நோக்கிலையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.