யாழில் தனது தோழியின் காதலனுடன் தலைமறைவான புதுமணப்பெண்; சினிமாவை மிஞ்சிய சம்பவம்!

0
53

யாழில் தனது நண்பியின் காதலனுடன் அண்மையில் திருமணமான யுவதி ஒருவர் தலைமறைவாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரு மாதங்களிற்கு முன் குறித்த பட்டதாரிப் பெண்ணுக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஆண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. பெற்றோரை இழந்த பட்டதாரிப் பெண் திருமணமான சகோதரி மற்றும் உறவுகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

திருமணத்தின் பின் கணவனுடன் தங்கியிருந்ததாக தெரியவருகின்றது. இந்நிலையில் குறித்த பட்டாதாரி மணப் பெண்ணை நேற்று முன்தினம் இருந்து காணவில்லை என கணவனும் பெண்ணின் உறவுகளும் தேடத் தொடங்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிசாரிடம் முறையிட ஆயத்தமான போது குறித்த பட்டாதாரிப் பெண் தான் இன்னொருவருடன் வாழத் தொடங்கியுள்ளதாகவம் கணவரிடமிருந்து விவாகரத்து வாங்கித் தருமாறும் தனது சகோதரிக்கு யுவதி கூறியுள்ளார்.

இந்நிலையில் தலைமறைவான யுவதியின் நண்பி, பெண்ணின் சகோதரி வீட்டில் வந்து நண்பியே தனக்கு துரோகம் செய்துவிட்டார் சண்டையிட்டதாகவும் தெரியவருகின்றது.