இலங்கையில் இருந்து கோட்டாபய தப்பிச் செல்ல உதவிய விமானப்படை!

0
44

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2022 ஜூலை 13ஆம் திகதியன்று, நாட்டிலிருந்து மாலைத்தீவுக்கு தப்பிச் செல்வதற்கு இலங்கை விமானப்படை நிதியளித்துள்ளமை தெரியவந்துள்ளது. இவ்விடயம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும், இதுவரை இந்த பயணத்திற்காக மேற்கொள்ளப்பட்ட செலவு குறித்து இலங்கை விமானப்படை இன்னமும் வெளியிடவில்லை.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி, கொழும்பில் இடம்பெற்ற பாரிய மக்கள் போராட்டத்தின் தொடர்ச்சியாக ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் இரண்டையும் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்தனர்.

இந்நிலையில், 2022 ஜூலை 13ஆம் திகதி கோட்டாபய, அவரது மனைவி மற்றும் இரண்டு மெய்ப் பாதுகாவலர்களுடன் அதிகாலையில் மாலைத்தீவுக்கு விமானப்படை விமானத்தில் புறப்பட்டார்.

அதன்போது, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி, நிறைவேற்று அதிகாரம், அரசாங்கத்தின் தலைவர் மற்றும் ஆயுதப்படைகளின் தளபதி என்ற அடிப்படையிலேயே கோட்டாபயவுக்கு இந்த விமான வசதிக்கு ஒப்புதல் வழங்கியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

என்றபோதும், இந்த விமானப் போக்குவரத்தின் இரகசிய தன்மை காரணமாக ஒப்புதல் ஆவணத்தின் விபரங்களை வெளியிட முடியாது என்றும் விமானப்படை கூறியுள்ளது.