ரணிலின் மேடையில் ரஞ்சன்; கட்சியில் சேர்ந்தாரா?

0
59

அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த கூட்டத்திற்கு பாடகராக மாத்திரமே சென்றதாக தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

“நான் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டேன், அதனால் நான் ஏற்று க்கொண்டேன். நான் ஒரு தொழில்முறை பாடகர், அதனால் என்னை நடிக்க அல்லது பாட அழைத்தால், நான் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இசை நிகழ்ச்சி செய்வேன்.

அதோடு எனக்கு இப்போது சமூக உரிமைகள் இல்லை அதனால் நான் பாட்டும் நடிப்பும் மட்டுமே செய்கிறேன். SJB உள்ளிட்ட குழுக்கள் எனது குடியுரிமைகளை மீட்டெடுக்க பாடுபடுவோம் என்று முன்பு உறுதியளித்தனர். ஆனால் இப்போது அவர்கள் யாரும் அதைப்பற்றி பேசுவதில்லை என்றும் ரஞ்சன் ராமநாயக் மேலும் கூறினார்.