யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

0
76

பிரித்தானிய சமூக முன்னேற்ற மையத்தின் மரபுரிமை அலகின் நிதி பங்களிப்புடனும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் அனுசரணையுடனும் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நாளை மாலை 3.30 மணிக்கு யாழ். பொதுசன நூலகத்திற்கு அருகில் உள்ள யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் நடைபெற உள்ளது .

யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் பரம புஷ்பரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சத்திர சிகிச்சை பேராசிரியரும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் மருத்துவ பீடாதிபதியும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உப தலைவருமாகிய ரவிராஜ் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்.

இவ் நிகழ்வின் முடிவில் ஆனைக்கோட்டை தொல்லியல் ஆய்வு தொடர்பான செய்தியாளர் சந்திப்பும் நடைபெற உள்ளது.  அதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் ப.புஷ்பரட்னத்தின் மேற்பார்வையில் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியுடன் ஆனைக்கோட்டையில் கடந்த மாதம் 20ஆம் திகதியிலிருந்து அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.