பல்கலை மாணவர்களால் போர்க்களமாக மாறும் பங்களாதேஷ்!

0
59

பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு இயக்கம் காரணமாக நாட்டில் மோதல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்திய பொலிசார், வதந்திகள் பரவாமல் தடுக்க மொபைல் போன்களுக்கான இணையதள வசதியை நிறுத்தவும் நடவடிக்கை எடுத்தனர்.

நாட்டில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பங்களின் குழந்தைகளுக்கு 30% வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவை திரும்பப் பெறக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மோதலில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.