கிளப் வசந்த இறுதிச் சடங்கு நாளில் நடுக்கடலில் பிறந்தநாள் கொண்டாட்டம்!

0
94

கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் இறுதி சடங்கு நடைபெற்ற தினத்தன்று “கஞ்சிப்பானை இம்ரான்” தனது 38 ஆவது பிறந்த நாளை கடலில் கொண்டாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பிறந்த நாள் நிகழ்வு கஞ்சிப்பானை இம்ரானின் நெருங்கிய நண்பர்களுடன் மிகவும் கோலாகலமாக நடுக்கடலில் கப்பலில் கொண்டாடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிளப் வசந்தவை கொலை செய்வதற்கு துபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “லொக்கு பெடி” என்பவருக்கு அறிவுறுத்தல் வழங்கியது “கஞ்சிப்பானை இம்ரான்” என பொலிஸார் சந்தேகம் வெளிட்யிட்டுள்ளனர். கடையொன்றின் திறப்பு விழாவில கலந்து கொண்டபோது கிளப் வசந்த சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.