முகத்தில் ரத்த காயங்கள்: இறப்பர் தோட்டத்தின் நடுவே சடலமாக மீட்கப்பட்ட மாணவி

0
63

முகத்தில் இரத்தக் கறையுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்த 16 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ரத்னபுர நிவித்தகலை, வடாபொத, யோவுன் கிராமத்தில் உள்ள இறப்பர் தோட்டத்திற்கு அருகில் உள்ள நடைபாதையில் இருந்து நேற்று (08) சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் வடாபொத, யோவுன் கிராமம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இறந்தவரின் தாயார் வடாபொத கோவிலுக்கு அருகில் கடை நடத்தி வருவதோடு சம்பவத்தன்று மாணவி பாடசாலைக்கு செல்லாததால் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த மாணவியை கடைக்கு வருமாறு தாய் தொலைபேசி அழைப்பொன்றை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடைக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டதால் கடையில் இருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த தாய், இறப்பர் தோட்டத்தின் நடுவில் உள்ள நடைபாதையில் சென்று கொண்டிருந்தபோது ​​சந்தேகத்துக்குரிய வகையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிவித்திகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.