யாழ் இளைஞன் கொலை சம்பவம்; சந்தேக நபர் ஒருவர் கைது

0
147

யாழ். நெடுந்தீவு இளைஞர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை பொலிசார் தேடி வருகின்ற நிலையில் ஒரு சந்தேக நபர் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைச் சம்பவ இடத்தில் தடயவியல் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஏனைய மூன்று சந்தேக நபர்களையும் தேடி கைது செய்யும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.