மக்களின் பாதுகாப்புக் கருதி தற்காலிக மின் துண்டிப்புக்கள்

0
95

கடும் காற்று தொடர் மழை போன்ற சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு என்பவற்றைக் கருத்திற் கொண்டு, சில பிரதேசங்களில் மின்சார இணைப்புக்களை தற்காலிமாக துண்டித்துள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களின் பல பகுதிகளில், இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால்,பொது மக்களின் பாதுகாப்புக் கருதி,பல பிரதேசங்களின் மின்சார இணைப்புக்கள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.