சல்மான் கானைக் கொன்றுவிட்டு இலங்கைக்கு தப்பிச் செல்லும் சதி அம்பலம்: ஒரு மாத காலமாக திட்டம்

0
93

போலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்துவிட்டு இலங்கைக்கு தப்பிச் செல்ல நான்கு சந்தேக நபர்கள் சதி செய்ததை நவி மும்பை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சல்மான் கானின் பாந்த்ரா இல்லத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

பாந்த்ரா துப்பாக்கிச் சூட்டில் ஏற்கனவே சந்தேகிக்கப்படும் கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் இந்த சதிக்கு பின்னால் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான தனஞ்சய் தபேசிங் என்ற அஜய் காஷ்யப், கௌரவ் பாட்டியா என்ற நஹ்வி, வாப்சி கான் என்ற வசீம் சிக்னா மற்றும் ரிஸ்வான் கான் ஆகியோர் பிஷ்னோய் கும்பலின் ஒருங்கிணைந்த முயற்சிகளில் ஒரு பகுதியாக இருந்ததாக Bussiness today தெரிவித்துள்ளது.

விசாரணையில் காஷ்யப் பாகிஸ்தானைச் சேர்ந்த டோகர் என்ற நபருடன் ஏகே 47களை வாங்குவதற்கு தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது.

பாந்த்ரா துப்பாக்கிச் சூட்டுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என சந்தேகிக்கப்படும் நான்கு பேரிடமும் அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.