1,700 அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும்!

0
36

கடந்த வார பேச்சு, வார்த்தைக்கு முதலாளித்துவ சம்மேளனம் வரவில்லை, அதனை எதிர்த்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பழனிசக்திவேல் தெரிவித்தார்.

முதலாளித்துவ சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு, புறக்கோட்டையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போராட்டம் ஒன்றை இன்று (19) முன்னெடுத்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பழனிசக்திவேல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நீண்ட கால அரசியல் வரலாறு உடைய அமைப்பு எங்களுடைய அமைப்பு, இந்த நாட்டில் காணப்படுகின்ற பெருந்தோட்ட துறையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் உள்ளனர். இந்த மக்களுக்கு நாங்கள் கூட்டு ஒப்பந்தம் ஊடாக சம்பளத்தை பெற்றுக்கொடுத்து இருந்தோம். இந்த நாட்டில் உண்மையாக இரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளிகளுக்கு 1,700 அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும், ஆனால் அதை முதலாளி சம்மேளனம் வழங்க மறுக்கிறது என தெரிவித்தார்.