கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24ம் திகதிகளில் நடைபெற உள்ள நிலையில் திருவிழாவை இரத்து செய்வதாக கச்சத்தீவு புனித பயண ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்கு தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பில் வெளியிட்ட செய்தி குறிப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
விசைப்படகு கடற்றொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக திருப்பயணிகளை அழைத்துச் செல்ல முடியாததால் கச்சத்தீவு திருவிழா இரத்து செய்யப்படுவதாகவும், இந்த விழாவில் இந்திய பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
![கச்சதீவு திருவிழாவை இரத்து செய்வதாக தமிழக வேர்க்கோடு பங்குத்தந்தை அறிவிப்பு | Kachchathivu Festival Cancelled கச்சதீவு திருவிழாவை இரத்து செய்வதாக தமிழக வேர்க்கோடு பங்குத்தந்தை அறிவிப்பு | Kachchathivu Festival Cancelled](https://cdn.ibcstack.com/article/09298cd7-5ab8-48e3-9d40-c2405c6cd376/24-65d5a5bf2a964.webp)