சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு: இந்த ஆண்டு 1.4 மில்லியனைத் தாண்டியுள்ளது

0
133

கடந்த மூன்று வாரங்களில் 128,047 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆண்டின் இது வரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1.4 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அண்மையில் வெளியிட்ட அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,404,998 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்தே அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டில் 719,978 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.