நெல் உலர்த்தும் இடமாக மாறிய கிளிநொச்சி பேருந்து நிலைய வளாகம்!

0
790

கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்றுவரை உரிய முறையில் பேருந்து நிலையம் முழுமையாக அமைத்து கொடுக்கப்படவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பேருந்து நிலைய வளாகம் நெல் உலர்த்தும் இடமாக மாறி வருகின்றது. தற்பொழுது பேருந்து நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், நெல்லை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தும் பகுதியாக பயன்படுத்தப்படுகின்றது.

கடந்த 2010ம் ஆண்டுக்கு பின்னர் வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் புதிதாக பேருந்து நிலையம் அமைத்த கொடுக்கப்பட்டது.

5 ஆண்டுகளிற்கு மேலாக அபிவிருத்தி

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையமானது சுமார் 5 ஆண்டுகளிற்கு மேலாக அபிவிரு்ததி செய்யப்பட்டு வருகின்ற போதிலும், அது முழுமை பெறாத காரணத்தினால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

பல மில்லியன் செலவில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகள், முழுமையாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் இவ்வாறு மாற்று பயன்பாட்டுக்காக இவை பயன்படுத்தப்படும் நிலையே உருவாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே பிரதேச மக்கள் போக்குவரத்தினை சிரமமின்றி பெற்றுக்கொள்வதற்கு ஏற்ப குறித்த பேருந்த நிலையத்தை முழுமையாக்கி மக்கள் பயன்பாட்டுக்கு கையளிக்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.